மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை
பாரதிய ஜனதா
கட்சியின் தேர்தல் அறிக்கை :

- வாஜ்பாய் கனவை
நினைவாக்கும் வகையில் நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
- நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்.
- 2022ம் ஆண்டுக்குள்
அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கட்டித் தரப்படும்.
- அயோத்தியில்
ராமர் கோவில் கட்டுப்படும்.
- சிறு குறு
விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- வட்டி இல்லாமல்
ரூபாய் ஒரு லட்சம் வரை குறுகிய கால விவசாய கடன் வழங்கப்படும்.
- தீவிரவாதம்
வேரோடு அளிக்கப்படும் வரை
தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும்.
- பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்படும்.
- இஸ்லாமிய
பெண்களின் உரிமையை நிலைநாட்டும் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்.
- சபரிமலையில்
பெண்கள் அனுமதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.
- நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கட்டுரைகள் உருவாக்கப்படும்.
- 2024 ஆம் ஆண்டுக்குள்
அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
- கருப்பு பணம்
மற்றும் பினாமி சொத்துக்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும்.
- ஒரு ரூபாயில்
சானிட்டரி நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பொது சிவில்
சட்டம் நிறைவேற்றப்படும்.
- மாநில காவல்துறை
நவீனமயமாக கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
- காஷ்மீர்
மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகார சட்டம் 370 ரத்து செய்யப்படும்.
- முத்ரா கடன்
திட்டம் மூலம் 17 கோடி தொழில்
முனைவோர் பயனடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 30 கோடியாகும் உயர்த்தப்படும்.
- 2020க்குள் அனைத்து
கிராம பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக பைபர் இணைத்தள வசதி வழங்கப்படும்.
- அனைத்து
மாநிலங்களுடன் ஆலோசித்து ஜிஎஸ்டி
நடைமுறைகள் மேலும் எளிதாக போடும்.
- அடுத்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு தேசிய
நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
- நாடு முழுவதும்
மத்திய மாநிலங்களிலும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி ஒரே நேரத்தில் தேர்தல்
நடத்தப்படும்.
0 Comments