அய்யா வைகுண்டர் தம் அவதார காலத்தில் சுவாமிதோப்பு பதியில் 6 ஆண்டுகள் தவம் செய்தார்.
அகிலம் வாசகம் :
" முதற்றான் தவசுயுகதவசு என் மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்றுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும் "
விளக்கம் :
முதல் இரு ஆண்டுகள் :
கலியுகம் அழிந்து தர்மயுகம் தோன்றுவதற்க்கு.
இரண்டாம் இரு ஆண்டுகள்:
சாதிக்கொடுமைகள் நீங்க.
மூன்றாம் இரு ஆண்டுகள் :
பெண்ணடிமை தீர்வதர்க்கு.
வைகுண்டர் தவம் :
முதல் இரு ஆண்டுகள் தவம் , ஆறு அடி ஆழமுள்ள பள்ளத்தில் நிகழ்ந்தது.
இரண்டாம் இரு ஆண்டுகள் தவம் ,வீராசனம் இட்டுத்தரை மேல் நிகழ்ந்தது.
மூன்றாம் இரு ஆண்டுகள் தவம் ஓர் பீடத்தை அமைத்து , அதன் மேல் அமர்ந்து அய்யா நிகழ்த்தினர்.
அய்யா தனது தவ வாழ்க்கையின் போது பச்சரிசி பாலை மட்டுமே அருந்தினார்.
அய்யா உண்டு

0 Comments