அய்யா வைகுண்டர் தம் அவதார காலத்தில் சுவாமிதோப்பு பதியில் ஆறு ஆண்டுகள் தவம் செய்தார்.
தன்னை நம்பி வந்த மக்களின் சகலநோய் பிணிகளை வேறும் மண்ணும் தண்ணீரே கொண்டு தீர்த்தார்.
" மருந்தாகத் தண்ணீர் மண்
வைத்தியங்கள் செய்ததுவும் "
-அகிலம்
சுமார் 4448 நோய்களை வேறும் மண்ணும் தண்ணீரே கொண்டே போக்கினார் நம் அய்யா வைகுண்டர்.
இருமல் , சளி , காசநோய் , குண்மவாயு , கால்மொட்டி , கைமொட்டி , குருடு , செவிடு , ஊமை முதலிய பல நோய்களை அய்யா வைகுண்டர் தீர்த்து வைத்தார்.
அய்யா வைகுண்டரின் அருளால்
குருடர்கள் பார்வை பெற்றனர்
ஊமைகள் பேசினார்
முடவர்கள் நடந்தனர்
குழந்தை வரம் வேண்டி வந்தவர்களுக்கு குழந்தை வரம் கிடைத்தது.
அய்யா வைகுண்டர் தம் அவதார காலத்தில் நிகழ்த்திய அற்புதங்களில் , சிறந்த அற்புதம் வேறும் மண்ணும் தண்ணீரே மருந்து என தந்து மானிடாரின் சகலநோய் பிணி தீர்த்ததே ஆகும்.
அய்யா உண்டு

0 Comments