பஞ்சப்பதியின் / ஐம்பதியின் சிறப்புகள்





ஐம்பதிக்குள் அதிசயம் தான் அறிந்திடுங்கோ கண்ணுமக்கா
                   - அய்யா வைகுண்டர் 




பஞ்சப்பதி / ஐம்பதி :

  1. சுவாமிதோப்பு பதி
  2. தாமரைக்குளம் பதி
  3. முட்டப்பதி
  4. அம்பலப்பதி
  5. பூப்பதி

சுவாமிதோப்பு பதி :





   சுவாமிதோப்பு பதி , இது ஐம்பதியில் ஒன்று. இது அய்யா வழியின் தலைமைப் பதி.

    இப்பதியில் தான் அய்யா வைகுண்டர் 6 ஆண்டுகள் தவம் செய்தார்.

      இப்பதியில் தான் அய்யா வைகுண்டர்  ஏழு அம்மையார்களை திருகல்யாணம் செய்தார்.


     இப்பதியில் தான் அய்யா வைகுண்டர் அமைத்த முத்திரிக்கிணறு உள்ளது.

    இங்கு அய்யா வைகுண்டர் பயன்படுத்திய கட்டில் முதலான பொருட்கள் உள்ளது.

   

திருவிழா :

  தை முதல் வெள்ளி ,  வைகாசி இரண்டாம் வெள்ளி மற்றும் ஆவணி முதல் வெள்ளி ‌‌‌‌கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.

திருஏடு வாசிப்பு :

      கார்த்திகை மாதம் 17 நாள் திருஏடு வாசிப்பு நடைபெறும்.


தாமரைகுளம் பதி :





           இது ஐம்பதியில் ஒன்று. அகிலத்திரட்டு அம்மானை எழுதிய அரிகோபால சீடர் பிறந்த ஊரில் அமைந்துள்ளது.

        இப்பதியில் தான் , அகிலத்திரட்டு அம்மானை மூல ஏடு பாதுகாக்கப்படுகிறது.

திருவிழா :

      சித்திரை மாதம் முதல் வெள்ளி கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.

திரு ஏடு வாசிப்பு:

      கார்த்திகை மாதம் 17 நாள்  திரு ஏடு வாசிப்பு நடைபெறும்.

முட்டப்பதி:




       முட்டப்பதி , இது ஐம்பதியில் ஒன்று.
வாகை பதியில் தவம் செய்த சான்றோர் குல மக்களுக்கு தவபெருமை கொடுத்த பதி. இந்த முட்டப்பதி .

       அய்யா வைகுண்டர் இரண்டாம் விஞ்சை பெற்ற இடம் , இந்த முட்டப்பதி.

திருவிழா :

    பங்குனி மாதம் இரண்டாவது வெள்ளி கொடியேறி  11 நாள் திருவிழா நடைபெறும்.

திரு ஏடு வாசிப்பு:

      கார்த்திகை மாதம் 17 நாள்  திரு ஏடு வாசிப்பு நடைபெறும்.


அம்பலப்பதி :




      இது ஐம்பதியில் ஒன்று. அய்யா வைகுண்டர் அருளிய 96 தத்துவங்கள் குறிக்கும் தத்துவக் கொட்டகை இப்பதியில் தான் அமைத்துள்ளது.

    இப்பதி அம்பலப்பதி, பள்ளப்பதி , மூலகுண்டப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.

    பார்வதி , பகவதி , லட்சுமி , மண்டைகாட்டாள் , வள்ளி , தெய்வானை முதலான தெய்வ சக்தியை திருகல்யாணம் என்ற பெயரில் அய்யா ஆற்கொண்ட இடமே , இந்த அம்பலப்பதி .

   இப்பதியில் தான் , பஞ்சதேவர்கள் செய்த  தவறை அய்யா மன்னித்து ,   சீவாயுமார்களக மாற்றி தம் பள்ளியறைக்கு வலதுபுறம் இடம் கொடுத்தார்.


திருவிழா :
  
   ஐம்பதி மாதம் முதல் வெள்ளி கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.

திரு ஏடு வாசிப்பு:

    பங்குனி மாதம் 3வது வெள்ளி துவங்கி சித்திரை மாதம் முதல் ஞாயிறு வரை திருஏடு வாசிப்பும் நடைபெறும்.

பூப்பதி :




    பூப்பதி ஐம்பதியில் ஒன்று. அய்யா வைகுண்டர் பூமடநாத அம்மையை திருக்கல்யாணம் செய்த இடம். தேவர்கள் பூ  மாரி பொழிந்த இடம்.

திரு ஏடு வாசிப்பு :

    கார்த்திகை மாதம் 17 நாள்  திரு ஏடு வாசிப்பு நடைபெறும்.


அய்யா உண்டு


Post a Comment

0 Comments